காவல் துறைக்குள் கருப்பு ஆடு.. வைரல் வீடியோவால் கழுத்தில் கத்தி.. உயிர் பயத்தில் கதறும் இன்ஃபார்மர்

Update: 2024-04-28 08:42 GMT

காவல் துறைக்குள் கருப்பு ஆடு.. வைரல் வீடியோவால் கழுத்தில் கத்தி.. உயிர் பயத்தில் கதறும் இன்ஃபார்மர்.. நடுங்கவைக்கும் ஆடியோ

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள ராமாபுரம் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக சமூக ஆவர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்த தகவலை போலீசாருக்கும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் தகவல் கொடுத்ததை மது விற்பனை செய்யும் நபர்களிடம், காவல் துறையில் உள்ள யாரோ சிலர் தெரிவித்துள்ளதாகவும், இதனால் அவர்கள் தன்னை கொலை செய்ய துரத்தி வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் போன் செய்து ஜேசுதாஸ் புகார் கூறியது இணையத்தில் பரவி வருகிறது... 

Tags:    

மேலும் செய்திகள்