"என்னால முடியல.." வேதனையில் அழுத இயக்குநர் செல்வராகவன் - நேரில் பார்த்து அதிர்ச்சியான பிள்ளைகள்

Update: 2023-11-20 10:59 GMT

தனது நாடு தோற்பதில் வரும் வலியை சொல்ல முடியவில்லை என இயக்குநர் செல்வராகவன் வேதனை தெரிவித்துள்ளார். X தளத்தில் கவலையை பகிர்ந்துள்ள செல்வராகவன், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்ற பிறகு தான் அழுது கொண்டே இருந்ததாகவும், இதுவரை தான் அழுததை பார்த்திராத குழந்தைகளுக்கு ஒன்றுமே புரியவில்லை எனவும் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் தோற்றதற்காக வரும் கண்ணீர் அல்ல, தனது தேசம் தோற்பதை பார்க்க முடியாததால் வரும் கண்ணீர் எனவும், தோல்வியால் நெஞ்சம் உடைந்து சிதறியதாகவும் செல்வராகவன் உருக்கமாக பதிவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்