தகாத உறவை தட்டிக்கேட்ட கணவன்..ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்..சென்னையை அதிர வைத்த சம்பவம்

Update: 2023-09-14 08:56 GMT

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த வீரக்குமார், ராயப்பேட்டையில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். கடை அருகில் வசித்த திருமணமான சரண்யா என்பவருடன் வீரக்குமார் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தற்போது பிரிந்து வாழும் நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளி பால்சனுடன் சரண்யா தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், வீரக்குமார் அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த சரண்யா, வீரக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அதுகுறித்து பால்சனிடம் கூறியுள்ளார். இந்நிலையில், வீரக்குமார் இரவில் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை போதையில் இருந்த பால்சன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். அருகில் இருந்தவர்கள் வீரக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு பால்சன், ராஜேஷ், வேலு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்