ஏழு கோடி பேர் கேட்ட ஒரு விஷயம்...ஐகோர்ட்டில் வைக்கப்பட்ட மனு

Update: 2024-03-23 11:37 GMT

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மொத்தம் ஏழு கோடி மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகவும், ஆனால் அவையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரிய இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்