"எல்லா இடத்துலயும் CCTV இருக்கு.." 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள்..

Update: 2024-05-01 03:36 GMT

ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், கடந்த 23 ஆம் தேதி உயிரிழந்த இந்த விவகாரத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் உத்தரவின் பேரில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், ஹேமச்சந்திரனின் பெற்றோர் ஆஜரான நிலையில், அவர்களிடம் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் விசாரணை நடத்தினார். விசாரணையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கத்திடம் ஹேமச்சந்திரனின் பெற்றோர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்