"நடந்து நடந்து ஓட்டு கேட்டதால் ஓடி ஓடி வேலை பார்க்கும் மா.சு" -மேடையில் புகழ்ந்த ஆளுநர் தமிழிசை

Update: 2023-11-06 08:16 GMT

சென்னை சைதாப்பேட்டையில், 'சைதை நாடார் சங்கத்தின்' ஆண்டு விழா நடைபெற்றது. இதில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழிசை சௌந்த‌ர‌ராஜன், மறைந்த எம்.பி வசந்த குமாரின் புகைப்படத்தையும் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தவர்களில் நாடார் சங்கத்தினர் உள்ளனர் என்றார்

Tags:    

மேலும் செய்திகள்