பொறியாளர் வீட்டில் கைவரிசை - பறிபோன 60 சவரன் நகை -களத்தில் போலீசார் விசாரணை

Update: 2024-01-13 03:34 GMT

சென்னை வேளச்சேரியில், மென்பொருள் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 60 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கருமாரியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் நாச்சியம்மாள் என்பவர் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்