நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகள் வைத்திருந்த நபர் கைது...மேலும் 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

Update: 2024-02-19 02:21 GMT

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எக்கத்தூர் மலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தோட்டத்து வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், உறவினர்களான சந்திரன், சாந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தலைமறைவாகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்