கை குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு போலீசில் சரணடைந்த தாத்தா.. அதிரவைக்கும் பரபரப்பு வாக்குமூலம்

Update: 2024-01-25 04:41 GMT

மணப்பாறை அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவத்தில், காவல்நிலையத்தில் சரணடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த மரிய ஜேக்கப் என்பவரது மகள் மரிய வினோதினி. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தகாத உறவால் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு மரிய ஜேக்கப் சென்றுள்ளார். அதே நேரத்தில், குழந்தை கிணற்றில் வீசியது தொடர்பாக காவல் நிலையத்திலும் சரணடைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தகாத உறவில் குழந்தை பிறந்த‌தால், அவமானம் ஏற்படும் என்பதற்காக குழந்தையை விற்க முடிவு செய்த‌தாக கூறியுள்ளார். ஆனால் குழந்தையை விற்க முடியாத‌தால், குழந்தையை விற்றுவிடுவதாக கூறி, மகளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, துணியில் சுற்றி பையில் போட்டு கிணற்றில் வீசியதாக மரிய ஜேக்கப் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்