"அரசு பள்ளி இருக்க தனியார் எதற்கு..?" பிள்ளைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த RDO... குவியும் பாராட்டுக்கள்

Update: 2024-02-23 14:13 GMT

குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அரசு அதிகாரிகளுக்கு மத்தியில், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தனது இரண்டு குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணி மாறுதல் பெற்று வந்திருக்கும் கலைவாணி, தனது இரண்டு குழந்தைகளையும் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். தரமான தனியார் பள்ளிகளை தேடி சென்று சேர்க்கும் அரசு அதிகாரிகளுக்கு மத்தியில், தனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த வருவாய் கோட்டாட்சியரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்