#Breaking|| சாலையில் கவிழ்ந்த ரூ.666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்கம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

Update: 2024-05-07 06:02 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் 666- கோடி ரூபாய் மதிப்பிலான 810- கிலோ

நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து... தங்க நகைகளை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி... வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சித்தோடு காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மூலமாக மாற்று வாகனத்தில் தங்க நகைகளை மீண்டும் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர்....

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சேலம் நோக்கி செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தங்க நகைகளை ஏற்றிச்செல்லும் தனியார் சரக்கு வாகனம் நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. சுமார் 666 கோடி ரூபாய் மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த பொழுது வளைவில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தங்க நகைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் தங்க நகைகளுடன் வாகனத்தை அப்புறப்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் தங்க நகைகளை எடுத்து வந்த சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு தற்போது மாற்று வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் தங்க நகைகளை மீண்டும் சேலம் நோக்கி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்