ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பரமக்குடி பேருந்துநிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பரமக்குடி வசந்தபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.