இறந்த குரங்கிற்கு பிரீசர் பாக்ஸ்..அஞ்சலி செலுத்திய பின் அடக்கம்

Update: 2023-09-20 05:58 GMT

வந்தவாசியில் உடல்நிலை சரி இல்லாமல் இறந்த குரங்கை இளைஞர்கள் அடக்கம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஒரு வீட்டு முன்பு வயது முதிர்ந்த பெண் குரங்கு ஒன்று சோர்ந்து அமர்ந்து இருந்தது. சோர்வுடன் இருந்த குரங்குக்கு இளைஞர்கள் தண்ணீர் மற்றும் பழங்கள் கொடுத்தனர். இருப்பினும் அந்த குரங்கு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டது. இளைஞர்கள் அந்தக் குரங்கை மனிதர்கள் போன்று இறுதிச் சடங்கு செய்யும் வகையில், பிரிசர் பாக்ஸில் வைத்து பதப்படுத்தினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் குரங்கின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு சங்கு ஊதி, தேவாரம் பாடியபடி நான்கு பேர் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்