தமிழகத்தில் முதன்முறை... குடல் உறுப்பு தானம் - இறப்பிலும் பலருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்

Update: 2023-11-27 17:29 GMT

தமிழகத்தில் முதன்முறையாக தர்மபுரியில் குடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், எரசீகல அள்ளி பகுதியைச் சேர்ந்த கவியரசு என்ற இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி, அவரது இதயம், நுரையீரல், ஈரல், கல்லீரல் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் முதன் முறையாக குடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்