தலைவிரித்தாடிய சொத்து பிரச்சனை..ஆஸ்பத்திரிக்கு அனுப்பியும் அடங்காத ஆத்திரம் | Chengalpet | CCTV

Update: 2024-04-03 13:46 GMT

திருக்கழுக்குன்றம் தாலுகா பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும், அவரது உறவினரான தருண் என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கீதாவின் குடும்பத்திற்கும், தருணின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தருண், கீதாவையும், அவரது பிள்ளைகளையும் சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்த அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும், மருத்துவமனைக்கு உறவினர்களுடன் வந்த தருண், அங்கிருந்த கீதாவின் தம்பியான கார்த்திக் என்பவர் மீதும் தாக்குதல் நடத்தினார். அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் தலைதெறிக்க ஓடினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட தருண், கார்த்திக், இளவரசன், சிகாமணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்