"பொய் செய்தி"... ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல்?

Update: 2023-10-29 02:59 GMT

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் மாளிகையில் இருக்கும் அதிகாரிகள் இதுபோன்று முன் பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளனர். கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்