ஃப்ரீ பஸ்ஸில் ஏறிய பெண்ணை... "தரக்குறைவாக பேசிய டிரைவர்..?" கொதித்தெழுந்த பெண் வாக்குவாதம்

Update: 2023-12-12 16:59 GMT

ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையத்தில் பெண் பயணியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் ஏறிய தன்னிடம் ஓட்டுநர் தரக்குறைவாக பேசியதாக குற்றம்சாட்டி பெண் பயணி ஒருவர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இலவச பேருந்தில் ஏறினால் ஒருமையில் பேசுவீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார். அந்த பெண்ணும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்