பிரபல நடிகைக்கு டோஸ் விட்ட ED - "பாவம் செய்யாதவர்கள் கல் எறியலாம்" - வாயடைக்க வைத்த ஒற்றை வார்த்தை

Update: 2023-09-02 04:51 GMT

உங்களில் யாரேனும் பாவம் செய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் கல்லெறியலாம் என மலையாள நடிகை நவ்யா நாயர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி சச்சின் சாவத், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, சச்சின் சாவத்தின் நண்பர் என்ற அடிப்படையில் நவ்யா நாயரிடமும் விசாரணை மேற்கொண்டது. இதற்கு விமர்சனங்கள் வந்ததை அடுத்து, உங்களில் யாரேனும் பாவம் செய்யாதவர்கள் இருந்தால் கல்லெறியெலாம் என்று நவ்யா நாயர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அவரை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பதிவு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்