மீண்டும் விருப்பம் தெரிவித்த துரைமுருகனின் மகன்

Update: 2024-03-06 09:58 GMT

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்.பியுமான கதிர் ஆனந்த் விருப்ப மனு அளித்துள்ளார். தனது தந்தையுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை சமர்ப்பித்தார். தொடர்ந்து தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், வெற்றி ஒன்றே இலக்கு என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பற்றி கவலை இல்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்