உலகையே மிரளவிட்ட துபாய் வெள்ளம்... கடைசி நேரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் ஷாக்

Update: 2024-04-18 06:17 GMT

#chennaiairport | #dubaiflood

உலகையே மிரளவிட்ட துபாய் வெள்ளம்

கடைசி நேரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் ஷாக்

"மகனை எப்படியாவது பாக்கணும் சார்"

திடீர் அறிவிப்பால் தவித்த தாய்

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 2வது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் மோசமான வானிலை நிலவி வருகிறது. சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. 2வது நாளாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகளுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் கவுன்ட்டரை மூடி விட்டுச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்