பாமகவுடன் இழுபறி.. இது சரிப்பட்டு வராது.. அதிரடியாக இறங்கிய ஈபிஎஸ்

Update: 2024-03-08 02:43 GMT

அதிமுக - பா.ம.க. இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தினர்.

vovt

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழு,

கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. பா.ம.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இதுவரை உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர், சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆலோசனை நடத்தினர்.அதில், பா.ம.க. உடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Tags:    

மேலும் செய்திகள்