2 மாதங்களுக்கு பின்.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

Update: 2024-05-09 07:18 GMT

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் பயணம் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவாய் இருந்ததன் காரணமாகவும், பராமரிப்பு பணி காரணமாகவும் பரிசல் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர், படித்துறை பணி உள்ளிட்ட ஒகேனக்கல் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் இன்று முதல் பரிசல் பயணம் தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்