ஊருக்குள் திரியும் ஒற்றை காட்டு யானை - ட்ரோனில் ரெக்கார்டான ஷாக் வீடியோ

Update: 2024-03-16 05:06 GMT

தர்மபுரி மாவட்டத்தில், கிராமத்துக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய ஒற்றை ஆண் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன் ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் யானை தர்மபுரி நகர் பகுதி வரை சென்றது. இதனையடுத்து, அந்த யானையை வனத்துறையினர் தொப்பூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், அந்த யானை மீண்டும் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஹள்ளி கிராமத்தில் தஞ்சம் புகுந்தது. ட்ரோன் மூலம் யானையை வனத்துறையினர் கண்காணித்த போது, அதே பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது. அப்போது, யானைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கிரேன் மூலம் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்