நடுவழியில் மறித்து கண்மூடித்தனமாக தாக்குதல்... பண்ருட்டி அருகே பெரும் பரபரப்பு

Update: 2024-03-31 11:35 GMT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வேனை வழிமறித்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவத்தூரைச் சேர்ந்த பாலாஜி வேனில் பண்ருட்டியில் இருந்து அங்குசெட்டிபாளையம் வழியாக சென்ற போது அந்த சாலையில் மது போதையில் இருந்த 2 பேர் ஆட்டோவை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு தகராறு செய்துள்ளனர்... தட்டிக் கேட்ட பாலாஜியை 2 பேரும் சரமாரியாகத் தாக்கி வேன் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்... பலத்த காயமடைந்த பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உறவினர்களும் ஊர் மக்களும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு செட்டிப்பாளையம் சாலையில் மறியல் நடத்தினர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்