மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் - 7 மாதம் தலைமறைவு சிக்கிய கணவர் - கடலூரில் பரபரப்பு

Update: 2024-03-25 16:19 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், 7 மாதங்களுக்குப் பிறகு கணவரை போலீசார் கைது செய்தனர். ஆலம்பாடி மாமலைவாசன் என்பவரின் மனைவி அபிநயா, கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்த வாந்தி எடுத்த நிலையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அபிநயா அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறாய்வில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் அதனை கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கில், கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த அபிநயாவின் கணவர் மாமலைவாசனை போலீசார் கைது செய்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அபிநயாவை மாமலைவாசன் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்