காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்...ஆசை வார்த்தையால் ஏமாந்த காதலி - குழந்தையோடு தனியே நிற்கும் அவலம்

Update: 2024-03-24 02:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ஜீவிதா என்ற இளம்பெண், புகழரசன் என்ற நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், புகழரசன் காதலித்து வந்த நிலையில் அவரால் கர்ப்பமடைந்ததாகவும், குழந்தை பெற்ற பின் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என புகழரசன் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என புகழரசன் பொய் சொல்லி ஏமாற்றுவதாகவும் ஜீவிதா புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்