காட்டுக்குள் இறந்து கிடந்த கல்லூரி மாணவி.. சிக்கிய கல்லூரி மாணவன்.. விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை

Update: 2024-02-13 05:10 GMT

ஊட்டியில் காதலிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊட்டியில் வெவ்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவரும் வனப்பகுதியில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, இளம்பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இளைஞரே மதுவில் விஷம் கலந்து கொடுத்து காதலியை கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்