அனுமதியில்லாமல் தேவாலயம்.. வெடித்த பூகம்பம் - ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்யும் வீடியோ

Update: 2023-10-22 02:09 GMT

சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தேவாலயம் ஒன்று, முறைப்படி அனுமதி வாங்காமல் கட்டப்பட்டாதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில வருடங்களாகவே ஒரு தரப்பினருடன் தேவாலயத்தை சேர்ந்தவர்களுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடைசியாக சென்னையில் ஏற்பட்ட புயலின் போது தேவாலயத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில், சுவரை மறு சீரமைப்பதற்காக தேவாலயத்தினர் முயன்றிருக்கின்றனர். இதற்கு எதிர் தரப்பு தெரிவித்த சிலர், தேவாலயத்தினருடன் தகராறு செய்து வந்த நிலையில், வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான சாமுவேல் திரவியம் தேவாலயத்தில் எந்த ஒரு கட்டிடப்பணியும் மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாமுவேல் திரவியம் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், சாமுவேல் திரவியத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவாலயத்தின் செயலாளர் போலீசில் புகாரளித்தார

Tags:    

மேலும் செய்திகள்