15 வயது சிறுமிக்கு திருமணமான சம்பவம்...தடுக்காத அதிகாரிகள்

Update: 2024-02-11 06:00 GMT

புதுக்கோட்டையை சேர்ந்த மதினா பீவி என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, அசாரூதின் என்பவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்ததாகவும், தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, குழந்தைகள் நல அலுவலரை எதிர்மனுதாரராக சேர்த்ததோடு, மனுதாரர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்