சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கு நேர்ந்த விபரீதம்

Update: 2024-05-01 06:46 GMT

சென்னையில், அரசுப்பேருந்தின் தானியங்கி கதவு கழன்று விழுந்து, பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர் பஸ்டிப்போ அருகே வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்தின் தானியங்கி கதவு, திடீரென கழன்று விழுந்தது. இதனால், பேருந்தின் பக்கவாட்டில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிஉந்த பெண் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அந்த பெண்ணுக்கு, தலை மற்றும் கை பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்