வேன் மீது பாய்ந்த பைக்.. ஸ்பாட்டிலேயே கருகிய உடல்.. சென்னையை அதிரவைத்த சம்பவம்

Update: 2024-04-18 14:14 GMT

கொருக்குப்பேட்டையை சேர்ந்த வேன் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர், மணலி பகுதியில் நிகழ்ச்சிக்காக ஆட்கள் ஏற்றி சென்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது அவர் வாகனம் மோதி விபத்துள்ளானது. இதில், இருவாகனங்கள் மீதும் தீப்பற்றி எரிந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சுந்தர்ராஜன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் ராஜேந்திரனை பிடித்து, பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்