பகலில் பிச்சை.. இரவில் பாலியல் தொழில்? - சென்னையில் யாரும் அறியா பக்கம்..?

Update: 2024-04-28 10:14 GMT

வெளியூரில் இருந்து வரும் திருநங்கைகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளுவதாக திருநங்கைகளின் தலைவிகள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது...

Vovt

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த திருநங்கை மந்த்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். அதில், தான் டெய்லராக உள்ள நிலையில், தன்னுடன் சக தோழிகள் 5 பேர் வசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்... தங்களுக்கு மூத்த திருநங்கைகளாக உள்ள 3 ஜமாத் தலைவிகள், இந்த ஜமாத் முறையை வைத்துக் கொண்டு அதில் வெளி மாநிலங்களிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பெண்களைப் போன்ற உணர்வுடன் இருக்கும் சிறு வயது திருநங்கைகளைக் குறி வைத்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் எதுவும் வழங்காமல் ஆசை வார்த்தை கூறி உறுப்பு மாற்றம் செய்வதாக வரவழைத்து, அவர்களைப் பகலில் பிச்சை எடுக்க வைப்பது, இரவில் பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது என சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக மந்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்கள் திருட்டு, போதைப் பொருள் உபயோகம் போன்றவற்றை செய்வதற்கும் அந்த ஜமாத் தலைவிகள் தான் காரணம் என அவர் சாடியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்டதால் தன் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு போட வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள திருநங்கை மந்த்ரா, காவல்துறை உரிய விசாரணை நடத்தி 3 தலைவிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்