பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் கொள்ளை - பல்லடத்தில் அதிர்ச்சி

Update: 2024-04-23 01:53 GMT

பல்லடம் அருகே பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து, 20 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். நொச்சிபாளையத்தை சேர்ந்த மணி என்பவர் குடும்பத்துடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். மாலை வீடு திரும்பிய போது, கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்த புகாரைத் தொடர்ந்து, பல்லடம் போலீசார் திருட்டு நடந்த இடத்தில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்