சிறுவனை அடித்து சாக்கு பையில் கட்டி சாக்கடையில் வீசிய பயங்கரம் -சென்னையில் குலை நடுங்க வைத்த கொடூரம்

Update: 2023-12-10 06:28 GMT

சென்னை மணலி அருகே 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பில் வசித்த சங்கர் என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணலி பகுதியில் குடியேறியுள்ளார்.

இவரது மகன் சஞ்சய், சிறு வயது முதல் பன்றிகளை பிடித்து தனது நண்பர்களுடன் விற்பனை செய்து வந்துள்ளார். சஞ்சய், அவரது தந்தை சங்கர் தனித்தனியே பன்றிகளை பிடித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட நிலையில், இருதரப்புக்கும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சஞ்சய் வீட்டில் இருந்தபோது, அவரை பாபு மற்றும் தர்மா ஆகியோர் அழைத்துச் சென்று, மணலி அருகே உள்ள பாபுவின் வீட்டில் கடப்பாரையால் அடித்துக்கொன்று மூட்டையில் சஞ்சயின் உடலை கட்டி ​மழைநீர் கால்வாயில் வீசியதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித், மோகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பாபு, தர்மா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், சஞ்சயின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்