சென்னை போலீஸை கொடூரமாக தாக்கிய வடமாநில ஊழியர்கள.. கையில் கிடைத்ததை கொண்டு சரமாரி அடி - பரபரப்பு

Update: 2024-05-01 06:31 GMT

சென்னை அண்ணா சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்களை வடமாநில ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை அண்ணா சாலை பெரிய மசூதி எதிரே உள்ள உணவகத்தில் இரவு ஒரு காவலர் உள்ளிட்ட 2 பேர் சாப்பிட வந்துள்ளனர்... சாப்பிட அமர்ந்த இருவரையும் வேறு இருக்கையில் அமரச் சொல்லி ஊழியர்கள் தரக்குறைவான வார்த்தையில் பேசியதாகத் தெரிகிறது... ஆனால் அவர்கள் எழுந்து வேறு இருக்கைக்குச் செல்ல மறுக்கவே வடமாநில ஊழியர்கள் கட்டை, கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் காவலருக்குப் பின்பகுதியில் காயம் ஏற்பட்டு சட்டை கிழிந்தது... உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்... உணவருந்த வந்த வாடிக்கையாளர்கள் வடமாநில ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்