தட்டிக்கேட்ட Ex மிலிட்டரி.. ஆள் கூட்டி வந்து மண்டை உடைப்பு - சென்னை இளைஞர்கள் நிகழ்த்திய பயங்கரம்

Update: 2024-04-28 07:50 GMT

சென்னை கே.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்களைத் தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரரின் மண்டை உடைக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் அடுக்குமாடி குடியிருப்பு உட்புற சாலையில் நேற்றிரவு இரு சக்கரவாகனத்தில் இளைஞர் சிலர் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீர்பின், அவரது நண்பர்கள் 5 பேர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் தனது நண்பர்களுக்கு போன் போட்டு வரவழைத்து கிரிக்கெட் பேட், ஹாக்கி மட்டையால் அவர்களைத் தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த ஸ்ரீர்பின், அவரது நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்