சென்னையில் கெமிக்கல்களை வைத்து டெஸ்ட் செய்த பிளஸ் 2 மாணவன்..உடல் சிதறி பலி..

Update: 2024-03-22 03:40 GMT

கொளத்தூர், முருகன் நகரை சேர்ந்தவர் ஆதித்ய பிரணவ். இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவரின் தந்தை ஹரிஹரன் கார் பேட்டரிகளை விற்று தொழில் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வீட்டில் இருந்த பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப் பொருள்களை வைத்து பிரணவ் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராதவிதமாக கெமிக்கல் மற்றும் பேட்டரிகள் வெடித்து சிதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த அதிர்ச்சியில் உறைந்த மாணவரின் தந்தை ஹரிஹரன், சில ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் மனைவியை உயிரிழந்ததாகவும், தற்போது தனது ஒரே மகனையும் இழந்து நிற்பதாகவும் கூறி கதறி அழுதது காண்போரையும் சோகத்தில் தள்ளியது.

Tags:    

மேலும் செய்திகள்