சென்னையில் இரவு நேர மின் தடையா? "60 பறக்கும் படை ரெடி"

Update: 2024-05-07 07:25 GMT

சென்னையில் இரவு நேர மின் தடையா? "60 பறக்கும் படை ரெடி"

மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று தலைமைச்செயலாளர் சிவதாஸ்மீனா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடைக்காலத்தில், மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக ஏற்படும் மின் தடைகளை, உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக உள்ள காரணத்தால், ஒரு சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் சில இடையூறுகள் அவ்வப்போது ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். இத்தகைய இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக, போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்