சிலிண்டரை விற்று குடித்த மகனை அடித்தே கொன்ற தாய்.. சென்னையை அதிரவிட்ட வாக்குமூலம்

Update: 2024-03-17 09:25 GMT

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை விட்டு கடந்த 9 மாதங்களாக மனைவி மற்றும் பிள்ளைகள் தனியே சென்று வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் முன்பு வெங்கடேஷ் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தனது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், வெங்கடேஷை அவரது தாய் சாந்தி என்பவர், அடித்துக் கொலை செய்தது அம்பலமானது. மதுபோதைக்கு அடிமையான வெங்கடேஷ், சிலிண்டரை விற்கு மதுகுடித்து விட்டு வந்ததால், ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்