சென்னையில் தாயின் கழுத்தை அறுத்த மகன் - கொடூரத்தின் உச்சம்

Update: 2024-02-24 12:51 GMT

சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மது போதையில் மகன் தாயின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சி பிளாக்கின் 8வது தளத்தில் சிவா என்பவர் தனது தாய் ராணியுடன் வசித்து வந்த நிலையில் வழக்கம் போல அதிகளவில் மது அருந்து விட்டு சிவா வீட்டிற்கு வந்துள்ளார்... தாய் ராணி தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், தனக்கு உணவளிக்காமல் சகோதரி வீட்டிற்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சிவா, கத்தியால் ராணியின் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயமடைந்த ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் சிவாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்