உலக அழகி போட்டிக்காக அமெரிக்கா புறப்பட்ட சென்னை பெண்

Update: 2022-10-13 11:05 GMT

உலக அழகி போட்டிக்காக அமெரிக்கா புறப்பட்ட சென்னை பெண்

அமெரிக்காவில் நடக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்க

இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி புறப்பட்டார்.

மனநல சிகிச்சை நிபுணரான பிளாரன்ஸ் ஹெலன் நளினி, கடந்த ஆண்டு மிஸஸ் இந்தியா பட்டம் வென்று, அமெரிக்க- இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற மிஸஸ் இண்டர்நேஷனல்-வேர்ல்ட் கிளாசிக் அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டத்தையும் அவர் வென்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் மியாமி நகரில் அடுத்த வாரம் நடைபெற உள்ள மிஸஸ் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்பதாற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்