தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-04-07 11:11 GMT

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் உள்ள குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடுத்து வெளியில் ஓடி வந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் கருகி எவ்வளவு பொருட்கள் சேதமடைந்தது என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்