முதியவர் மரணம்.. ஸ்தம்பித்த சென்னை ECR சாலை | Chennai

Update: 2024-02-21 08:35 GMT

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் இல்லாத‌தால், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர் உயிரிழந்த‌தாக கூற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈஞ்சம்பாக்கம் மீனவ குப்பத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பத்தில் மோதி மயங்கி விழுந்துள்ளார். உடனே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், பெரும்பாக்கத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமத‌மானதால், சடையாண்டி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற சடையாண்டி உறவினர்கள், ஆம்புலன்ஸ் வராத‌தால் உயிரிழந்த‌தாக குற்றம் சாட்டி, ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்