சென்னையில் மிருகத்தனமாக அடித்து கொண்ட தனியார் பஸ் கண்டக்டர்ஸ் - வைரலாகும் பகீர் காட்சிகள்

Update: 2024-04-23 09:00 GMT

சென்னையை அடுத்த மறைமலைநகரில், யார் முதலில் பயணிகளை ஏற்றுவது என்ற போட்டியில், இரு தனியார் பேருந்து நடத்துநர்கள் சாலையில் அடித்துக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. அப்போது, பயணிகளை ஏற்றுவதில், 2 தனியார் பேருந்துகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை முந்திச் சென்று பயணிகளை ஏற்றியதால், பேருந்து நடத்துநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்