தீவிர கண்காணிப்பில் சென்னை விமான நிலையம் - பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

Update: 2024-03-19 02:31 GMT

மக்களவை தேர்தல் தேதியை கடந்த சனிக்கிழமை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலும் வருமான வரித்துறை, சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்