பூனையை டார்கெட் செய்யும் நபர்..இரவில் நடக்கும் வேட்டை. பின்னணியில் யார்..? "எனக்கு இது தான் பொழப்பே"

Update: 2024-05-01 06:34 GMT

சென்னை, அயனாவரத்தில்... சாலையில் சுற்றித்திரியும் பூனைகள் நள்ளிரவில் திருடப்படுவதாக கூறி திரைப்பட நடன ஆசிரியர் ஒருவர் புகாரளித்துள்ளார். கீழ்பாக்கத்தை சேர்ந்த நடன ஆசிரியர் ஜோஷ்வா என்பவர் விலங்கு நல வாரியத்தில் அளித்த புகாரில், நள்ளிரவில் பைக்கில் வந்த இருவர், பூனைகளை திருட முயன்றதாகவும், இது குறித்து கேட்ட போது தன்னை மிரட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார். சாலையோரங்களில் சுற்றித்திரியும் பூனைகளை நள்ளிரவில் திருடும் கும்பல், அவைகளை இறைச்சி கடைகளுக்கு விற்பதாகவும் ஜோஷ்வா குற்றம்சுமத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்