பஞ்சர் ஓட்டும் போது வெடித்து சிதறிய கார் டயர்.. லாரி உரிமையாளர் பரிதாப பலி.. பதறவைக்கும் CCTV காட்சி

Update: 2023-10-17 14:05 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே லாரி டயருக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தில் லாரி உரிமையாளர் உயிரிழந்தார். பச்ச காடு பகுதியில் உள்ள லாரி பட்டறையில் மோகனசுந்தரம் என்பவர் லாரி டயருக்கு பஞ்சர் போட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது . மேலே பறந்து சென்ற லாரி டயர் மோகன்சுந்தரம் மற்றும் லாரி உரிமையாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். டயர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்