நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய கார், தனியார் பேருந்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2023-11-09 13:13 GMT

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் வேன் பின்புறமாக வந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரும் காரில் வந்த ஒட்டுநர் என 3 காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்