மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு | vinayagar chathurthi 2023

Update: 2023-09-17 04:21 GMT

அறந்தாங்கி அருகே, விநாயகர் சிலைக்கு சீரியல் விளக்கு அமைக்கும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான். அரசர்குளம் மேல்பாதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சின்னகருப்பன், விநாயகர் சிலைக்கு சீரியல் விளக்கு அமைத்த போது, மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள், சிறுவனை மீட்டு முதலுதவி செய்தும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலறிந்து வந்த நாகுடி போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்