சென்னை கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெங்களூரிலிருந்து வந்த தகவல்

Update: 2024-03-07 04:30 GMT

கடந்த நில நாள்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது போல் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வைக்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பெங்களூரு காவல் ஆணையர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பெங்களூரு காவல்துறையினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதன்பேரில், சென்னை காவல்துறையினரை பெங்களூரு போலீசார் உடனடியாக தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தனர். அதன்பேரில், கோயில்களில் சோதனை செய்ததில் வெடிகுண்டு குறித்து வந்த தகவல் வதந்தி எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்